நீலகிரி : உதகையில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருபத்தோரு குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி : உதகையில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருபத்தோரு குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழும ஒருங்கிணைப்பில், மாவட்டத்திலுள்ள சிறார் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருபத்தோரு குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு, உதகை அரசு குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்றது. குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள் முனிரத்தினம், சண்முகானந்தன், கண்ணன், மேரி சகாயி செபஸ்டினா ஆகியோர் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கடமைகள், பொறுப்புகள், இல்லத்தை நடத்துவதில் உள்ள சட்ட நெறிமுறைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை வழங்கினர். இல்ல நிர்வாகிகள் தாங்கள் எதார்த்தத்தில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசினர். அதற்கான சட்ட தீர்வுகள் குறித்தும் கருத்து பரிமாறப்பட்டது. இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்திலுள்ள குழந்தைகள் இல்ல நிர்வாகிகளும் அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழும ஒருங்கிணைப்பில், மாவட்டத்திலுள்ள சிறார் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருபத்தோரு குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு, உதகை அரசு குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்றது. குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள் முனிரத்தினம், சண்முகானந்தன், கண்ணன், மேரி சகாயி செபஸ்டினா ஆகியோர் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கடமைகள், பொறுப்புகள், இல்லத்தை நடத்துவதில் உள்ள சட்ட நெறிமுறைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை வழங்கினர். இல்ல நிர்வாகிகள் தாங்கள் எதார்த்தத்தில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசினர். அதற்கான சட்ட தீர்வுகள் குறித்தும் கருத்து பரிமாறப்பட்டது. இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்திலுள்ள குழந்தைகள் இல்ல நிர்வாகிகளும் அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.