நீலாம்பூர் அருகே திடீர் திவிபத்தால் கொளுந்துவிட்டு எரிந்த காரால் பரபரப்பு

கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.


கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.



கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே கோவையை நோக்கி வந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக காரின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. காற்றின் வேகத்தால் தீ காரின் பிற பகுதிக்கும் பரவியது. இதனால், கார் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமாகியது. இதனிடையே, அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் மிகுந்த சமயத்தில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...