கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே கோவையை நோக்கி வந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக காரின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. காற்றின் வேகத்தால் தீ காரின் பிற பகுதிக்கும் பரவியது. இதனால், கார் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமாகியது. இதனிடையே, அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் மிகுந்த சமயத்தில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.