கோவை : அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது அமெரிக்கா தூதரகம் கொடுத்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை : அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது அமெரிக்கா தூதரகம் கொடுத்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபகாலமாகவே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி படித்த இளைஞர்களை ஏமாற்றும் கும்பல் அதிகரித்து வருகிறது. இந்த மோசடி கும்பல்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களின் பணம், பொருள், படிப்பு, நிம்மதி ஆகியவற்றை இழந்துள்ளனர். இவ்வாறு அதிகரித்து வரும் மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறை சார்பில் விழிப்புணர்வுகள் செய்தாலும், இன்னும் இளைஞர்கள் ஏமாற்றமடைந்து தான் வருகின்றனர். இந்த செயல்பாடுகளால் அரசுத் துறையும், வெளிநாடு செல்பவர்களின் ஆவணங்களை தீவிரமாக கண்காணிக்கிறது.
இந்த சூழ்நிலையில், சென்னை அமெரிக்க தூதரகத்தில் இருந்து கோவை மாநகர காவல் ஆணையாளருக்கு புகார் மனு ஒன்று வந்துள்ளது. அதில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த அருண் என்கிற அருண்குமார், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அசோக், இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த நிவாஸ் ஆகியோர் ‘ஸ்மார்ட் டாட் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் நிறுவனம் நடத்தி போலி ஆவணங்களை தயாரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அமெரிக்க தூதரகத்தின் ஆவணங்களை போலியாக தயாரித்து அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் யார் யாரை ஏமாற்றியுள்ளனர், எப்படி ஏமாற்றியுள்ளனர், இவர்களின் பின்னணி என்ன என்பது குறித்தெல்லாம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாகவே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி படித்த இளைஞர்களை ஏமாற்றும் கும்பல் அதிகரித்து வருகிறது. இந்த மோசடி கும்பல்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களின் பணம், பொருள், படிப்பு, நிம்மதி ஆகியவற்றை இழந்துள்ளனர். இவ்வாறு அதிகரித்து வரும் மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறை சார்பில் விழிப்புணர்வுகள் செய்தாலும், இன்னும் இளைஞர்கள் ஏமாற்றமடைந்து தான் வருகின்றனர். இந்த செயல்பாடுகளால் அரசுத் துறையும், வெளிநாடு செல்பவர்களின் ஆவணங்களை தீவிரமாக கண்காணிக்கிறது.
இந்த சூழ்நிலையில், சென்னை அமெரிக்க தூதரகத்தில் இருந்து கோவை மாநகர காவல் ஆணையாளருக்கு புகார் மனு ஒன்று வந்துள்ளது. அதில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த அருண் என்கிற அருண்குமார், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அசோக், இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த நிவாஸ் ஆகியோர் ‘ஸ்மார்ட் டாட் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் நிறுவனம் நடத்தி போலி ஆவணங்களை தயாரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அமெரிக்க தூதரகத்தின் ஆவணங்களை போலியாக தயாரித்து அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் யார் யாரை ஏமாற்றியுள்ளனர், எப்படி ஏமாற்றியுள்ளனர், இவர்களின் பின்னணி என்ன என்பது குறித்தெல்லாம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.