கோவை : தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
கோவை : தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது, வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் குடியிருப்புவாசிகள், தெரு விளக்கு, சீரான குடிநீர் விநியோகம் மற்றும் பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அப்படை வசதிகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
"கடந்த 6 மாதங்களாக குடிநீர் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டில் குடிநீர் விநியோகம் பெரும் பிரச்சனையாக உள்ளது. எனவே, நாள்தோறும் அடிப்படையில் குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம்," என்கிறார் வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசி.

மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, சாக்கடை வசதிகள் ஏதும இல்லாததால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது, வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் குடியிருப்புவாசிகள், தெரு விளக்கு, சீரான குடிநீர் விநியோகம் மற்றும் பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அப்படை வசதிகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
"கடந்த 6 மாதங்களாக குடிநீர் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டில் குடிநீர் விநியோகம் பெரும் பிரச்சனையாக உள்ளது. எனவே, நாள்தோறும் அடிப்படையில் குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம்," என்கிறார் வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசி.

மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, சாக்கடை வசதிகள் ஏதும இல்லாததால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.