கோவையில் புதிய கல்வி கொள்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்யக் கோரி த.பெ.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

கோவை : கோவையில் நடைபெற்ற புதிய கல்வி கொள்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : கோவையில் நடைபெற்ற புதிய கல்வி கொள்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தேசிய வரைவு கல்விக் கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் கோவை - அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய 9 மாவட்டங்களைச் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி வளர்ச்சிக்கு துணை புரியும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், கல்வி சார்ந்த ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 



ஆனால், முறையாக யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் 9 மாவட்டங்களைச் சார்ந்த குறிப்பிட்ட சில அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை வைத்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி இராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கூட்டம் நடைபெற்ற பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அப்போது, அவர் பேசுகையில், "இந்த கருத்து கேட்புக் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை. எனவே, அனைத்து தரப்பினருக்கும் மீண்டும் தகவல்கள் தெரிவித்து, இந்தக் கூட்டத்தை முழுமையாக மக்கள் மத்தியில் சென்றடைய செய்து, 9 மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களிடமும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரிடமும் முறையாக கருத்து கேட்க வேண்டும். அவ்வாறு கருத்துக்களைக் கேட்ட பின்புதான் இது குறித்து அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். எனவே, இந்தக் கூட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். ஏன் யாருக்கும் தகவல்களை அளிக்கவில்லை. எனவே, இந்தக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்," எனக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.



அதனைத் தொடர்ந்து, அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் ராமகிருஷ்ணனை உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகத்தினரும், போலீசாரும் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து ராமகிருஷ்ணன் தலைமையிலான த.பெ.தி.க.வினர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நின்று புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், தற்போது நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மீண்டும் இவ்வாறு இதுபோன்ற கூட்டங்கள் யாருக்கும் தெரியாமல் நடைபெற்றால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக ராமகிருஷ்ணன் தெரிவித்தார். பின்னர், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். 



இந்த நிலையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஈஸ்வரன் மற்றும் ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வருகை தந்து அங்குள்ள அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...