கோவை : மறுநிலஅளவைப் பணிகளில் ஆட்சேபணை தெரிவிக்க விரும்பும் நில உரிமையாளர்கள், அறிவிப்பு பெற்றுக் கொண்ட 30 நாட்களுக்குள் ஆட்சேபணை மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : மறுநிலஅளவைப் பணிகளில் ஆட்சேபணை தெரிவிக்க விரும்பும் நில உரிமையாளர்கள், அறிவிப்பு பெற்றுக் கொண்ட 30 நாட்களுக்குள் ஆட்சேபணை மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசாணை (நிலை) எண்.733 வருவாய்த்துறை நாள்:14.11.20006-ன்படி, தமிழ்நாடு முழுவதும் நவீன நிலஅளவை கருவிகளான ஜி.பி.எஸ். மற்றும் மொத்த நிலையம் மூலம் மறுநிலஅளவை மேற்கொள்ள அரசால் உத்தரவிடப்பட்டது. இந்த அரசாணையின்படி, கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் மூன்றாம் நிலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் மறுநிலஅளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிலஉரிமையாளர்களுக்கு அவர்களது அனுபவத்தில் உள்ள நிலத்தின் புல எண்/பரப்பு விபரங்களுடன் தமிழ்நாடு நிலஅளவை எல்லைச் சட்டம் பிரிவு 9(2)-ன்படி அறிவிப்பு சார்வு செய்யப்படும் பணி நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
9(2) அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருக்கும்பட்சத்தில், 9(2) அறிவிப்பு பெற்றுக் கொண்ட 30 நாட்களுக்குள் சம்பந்தபட்ட நிலஉரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், பெயர் பதிவுகள் தொடர்பாக ஆட்சேபணை ஏதுமிருப்பின் நகர நிலவரித்திட்ட தனிவட்டாட்சியரிடமும் மேல்முறையீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் இத்திட்டப் பணியின் மூலம் தங்களது நிலஉரிமைக்கான 9(2) அறிவிப்புகள் பெற்றுக் கொள்வதுடன், அதில் ஏதேனும் ஆட்சேபனையிருப்பின் அவற்றை சட்டப்பூர்வமாக தீர்வு காணும் வகையில் மனு அளித்து இந்த வாய்ப்புகள் மூலமாக முழுமையாக பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசாணை (நிலை) எண்.733 வருவாய்த்துறை நாள்:14.11.20006-ன்படி, தமிழ்நாடு முழுவதும் நவீன நிலஅளவை கருவிகளான ஜி.பி.எஸ். மற்றும் மொத்த நிலையம் மூலம் மறுநிலஅளவை மேற்கொள்ள அரசால் உத்தரவிடப்பட்டது. இந்த அரசாணையின்படி, கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் மூன்றாம் நிலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் மறுநிலஅளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிலஉரிமையாளர்களுக்கு அவர்களது அனுபவத்தில் உள்ள நிலத்தின் புல எண்/பரப்பு விபரங்களுடன் தமிழ்நாடு நிலஅளவை எல்லைச் சட்டம் பிரிவு 9(2)-ன்படி அறிவிப்பு சார்வு செய்யப்படும் பணி நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
9(2) அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருக்கும்பட்சத்தில், 9(2) அறிவிப்பு பெற்றுக் கொண்ட 30 நாட்களுக்குள் சம்பந்தபட்ட நிலஉரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், பெயர் பதிவுகள் தொடர்பாக ஆட்சேபணை ஏதுமிருப்பின் நகர நிலவரித்திட்ட தனிவட்டாட்சியரிடமும் மேல்முறையீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் இத்திட்டப் பணியின் மூலம் தங்களது நிலஉரிமைக்கான 9(2) அறிவிப்புகள் பெற்றுக் கொள்வதுடன், அதில் ஏதேனும் ஆட்சேபனையிருப்பின் அவற்றை சட்டப்பூர்வமாக தீர்வு காணும் வகையில் மனு அளித்து இந்த வாய்ப்புகள் மூலமாக முழுமையாக பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.