நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இன்று விபத்தி்ல்லா தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இன்று விபத்தில்லா தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அதிக மலை பாதைகளையும், கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்ட மாவட்டமாகும். மேலும், சுற்றுலா மாவட்டமாக திகழ்வதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைப்பாதை, குன்னூர், மேட்டுப்பாளையம் மலைப்பாதை, கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மற்றும் கூடலூர், உதகை மலைப்பாதை வழியாக தான் உதகைக்கு வருவதால், அவர்களுக்கு மலைப்பாதையில் எவ்வாறு வாகனம் இயக்க வேண்டும் என்பது அவ்வளவாக தெரிவதில்லை. இதனால், விபத்தில் வாகனங்கள் சிக்கி உயிர்கள் பலியாகுவதும், படுகாயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பலகைகள் அனைத்து சாலைகளிலும், வைக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக, இந்தாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட் பெல்ட் அணிவது குறித்தும் காவல்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீலகிரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக அறிவிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில், இன்று விபத்தில்லா நாளாக அனுசரிக்க முடிவு செய்து, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. கேத்தி காவல் ஆய்வாளர் டி.ஜெய்குமார் தலைமையில் சிறப்பு துணை ஆய்வாளர் ரத்தினம் உள்ளிட்ட காவல்துறையினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அதிக மலை பாதைகளையும், கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்ட மாவட்டமாகும். மேலும், சுற்றுலா மாவட்டமாக திகழ்வதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைப்பாதை, குன்னூர், மேட்டுப்பாளையம் மலைப்பாதை, கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மற்றும் கூடலூர், உதகை மலைப்பாதை வழியாக தான் உதகைக்கு வருவதால், அவர்களுக்கு மலைப்பாதையில் எவ்வாறு வாகனம் இயக்க வேண்டும் என்பது அவ்வளவாக தெரிவதில்லை. இதனால், விபத்தில் வாகனங்கள் சிக்கி உயிர்கள் பலியாகுவதும், படுகாயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பலகைகள் அனைத்து சாலைகளிலும், வைக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக, இந்தாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட் பெல்ட் அணிவது குறித்தும் காவல்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீலகிரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக அறிவிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில், இன்று விபத்தில்லா நாளாக அனுசரிக்க முடிவு செய்து, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. கேத்தி காவல் ஆய்வாளர் டி.ஜெய்குமார் தலைமையில் சிறப்பு துணை ஆய்வாளர் ரத்தினம் உள்ளிட்ட காவல்துறையினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.