இந்தி, ஆங்கிலம் மொழிகளில் நடத்தப்பட்ட தபால்துறை தேர்வு ரத்து : கோவையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவை : இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் நடைபெற்ற தபால்துறை ரத்து செய்யப்பட்ட நிலையில், கோவையில் வழக்கறிஞர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கோவை : இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் நடைபெற்ற தபால்துறை ரத்து செய்யப்பட்ட நிலையில், கோவையில் வழக்கறிஞர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

தபால்துறையில் அஞ்சலர் உட்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டது. இதனால், தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியுடன் தேர்வை எழுதினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சட்டமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன.

இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பிய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் அவையை முடக்கினர். அப்போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் புதிய தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக இன்று மதியம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...