பி.எஸ்.ஜி.யில் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் : த.பெ.தி.க.வினர் முற்றுகை

கோவை : புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரியை த.பெ.தி.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை : புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரியை த.பெ.தி.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



புதிய கல்வி கொள்கை குறித்து மண்டல அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் ஏற்கப்பட்டு, புதிய கல்வி கொள்கையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு செய்ய திட்டம். அந்த வகையில், புதிய கல்வி கொள்கை குறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மண்டல அளவிலான பணிமனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பழனிச்சாமி, மாவட்ட கல்வி துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர். 



இந்த நிலையில், இக்கல்வி கொள்கை குறித்து சாதகமாக பேசுபவர்களை மட்டும் அழைத்து இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாகக் கூறி, பி.எஸ்.ஜி. கல்லூரியை த.பெ.தி.க.வினர் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...