கோவை : புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரியை த.பெ.தி.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரியை த.பெ.தி.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய கல்வி கொள்கை குறித்து மண்டல அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் ஏற்கப்பட்டு, புதிய கல்வி கொள்கையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு செய்ய திட்டம். அந்த வகையில், புதிய கல்வி கொள்கை குறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மண்டல அளவிலான பணிமனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பழனிச்சாமி, மாவட்ட கல்வி துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், இக்கல்வி கொள்கை குறித்து சாதகமாக பேசுபவர்களை மட்டும் அழைத்து இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாகக் கூறி, பி.எஸ்.ஜி. கல்லூரியை த.பெ.தி.க.வினர் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.