போத்தனூர் ரயில்நிலையத்தில் ரயில்களை நிறுத்தி இயக்க வலியுறுத்தி மத்திய அரசிடம் தி.மு.க. எம்.பி. மனு

டெல்லி : கோவை-மங்களூர் இன்டர்சிட்டி உள்ளிட்ட ரயில்களை போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறையின் இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியிடம் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் மனு அளித்துள்ளார்.

டெல்லி : கோவை-மங்களூர் இன்டர்சிட்டி உள்ளிட்ட ரயில்களை போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறையின் இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியிடம் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் மனு அளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- பொள்ளாச்சி தொகுதி மக்களின் வசதிக்காக கோவை - மங்களூர் இன்டர்சிட்டி, பெங்களூர் - எர்ணாகுளம் இன்டர்சிட்டி, ஆலப்புழா - டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த சந்திப்பின் போது, மதுக்கரை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குறுகிய பாதை அகலப்படுத்தும் பணி உடனடியாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் கூறினார். 

ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணியில் மாநில அரசு 50 சதவீதமும், ரயில்வே நிர்வாகம் 50 சதவீத பங்களிப்பும் செய்யப்பட வேண்டும் என்றும், எனவே, பாலம் அகலப்படுத்தும் பணிக்கு கழகத் தலைவர் ஸ்டாலினை அணுகி, தமிழக அரசை இப்பணிக்கு உண்டான நிதியை வழங்கிடக் கோரிக்கை வைக்கப்படும் என பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தெரிவித்தார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...