கோவை : வாலாங்குளம் அருகே உள்ள ஜி.எம். நகர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.
கோவை : வாலாங்குளம் அருகே உள்ள ஜி.எம். நகர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.

கோவை மாநகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் மின்வாரியத் துறையினரின் உதவியுடன் உக்கடம் வாலாங்குளம் அருகே உள்ள ஜி.எம். நகர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இன்று அகற்றப்பட்டன. வாலங்குளத்தை ஆக்கிரமித்து சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு 275 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதனை போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் இன்று அகற்றினர். ஜி.எம். நகர், மஜித் காலனி மற்றும் வாலாங்குளம் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுபவர்களுக்கு புல்லுக்காடு பகுதியில் 1,840 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

"பயனாளிகளுக்கு ஏற்கனவே புல்லுக்காடு பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளைக் காலி செய்துவிட்டு, புதிய வீடுகளுக்கு மாறிவிட்டனர். ஒருசிலர் மட்டுமே வெளியேறாமல் இருந்து வருகின்றனர். அவர்களை வெளியேற்றி விட்டு, ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன," என்கிறார் கோவை மாநகராட்சி மூத்த அதிகாரி.