உக்கடம் அருகே உள்ள ஜி.எம். நகர் பகுதி ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கோவை : வாலாங்குளம் அருகே உள்ள ஜி.எம். நகர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.


கோவை : வாலாங்குளம் அருகே உள்ள ஜி.எம். நகர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. 



கோவை மாநகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் மின்வாரியத் துறையினரின் உதவியுடன் உக்கடம் வாலாங்குளம் அருகே உள்ள ஜி.எம். நகர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இன்று அகற்றப்பட்டன. வாலங்குளத்தை ஆக்கிரமித்து சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு 275 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதனை போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் இன்று அகற்றினர். ஜி.எம். நகர், மஜித் காலனி மற்றும் வாலாங்குளம் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுபவர்களுக்கு புல்லுக்காடு பகுதியில் 1,840 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.



"பயனாளிகளுக்கு ஏற்கனவே புல்லுக்காடு பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளைக் காலி செய்துவிட்டு, புதிய வீடுகளுக்கு மாறிவிட்டனர். ஒருசிலர் மட்டுமே வெளியேறாமல் இருந்து வருகின்றனர். அவர்களை வெளியேற்றி விட்டு, ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன," என்கிறார் கோவை மாநகராட்சி மூத்த அதிகாரி.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...