கோவை : முத்தணன்குளம் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை : முத்தணன்குளம் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை முத்தணன்குளத்தை சுற்றிலும் சுமார் 1,400 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை காலி செய்து, தொண்டாமுத்தூர், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு இடம்பெயருமாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீடுகளை காலி செய்யக் கோரி வரும் வாரத்தில் அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றுக் கொண்ட தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் வீடுகளைக் காலி செய்யத் தவறினால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.