கோவை : பொதுமக்களின் வசதிக்காக சாதாரண கட்டணப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5 எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : பொதுமக்களின் வசதிக்காக சாதாரண கட்டணப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5 எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கடந்த ஆண்டு கட்டண உயர்விற்கு பிறகு நகரப் பேருந்துகள் சாதாரணம் மற்றும் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் (எஸ்.எல்.எப்) என்ற இருவகை பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதில், தாழ்தள சொகுசுப் பேருந்துகளை தவிர்த்து சாதாரண கட்டணப் பேருந்துகளை பொதுமக்கள் அடையாளம் காண்பதில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம், கடந்த ஜுலை 01-ம் தேதி முதல் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் நீங்கலாக, அனைத்து சாதாரணப் பேருந்துகளிலும் "சாதாரண கட்டணம் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5" என ஸ்டிக்கர் வில்லைகள் பேருந்தின் முன்புற முகப்புக் கண்ணாடி மற்றும் பின்புற கண்ணாடிகளில் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருவதால் இப்பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கடந்த ஆண்டு கட்டண உயர்விற்கு பிறகு நகரப் பேருந்துகள் சாதாரணம் மற்றும் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் (எஸ்.எல்.எப்) என்ற இருவகை பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதில், தாழ்தள சொகுசுப் பேருந்துகளை தவிர்த்து சாதாரண கட்டணப் பேருந்துகளை பொதுமக்கள் அடையாளம் காண்பதில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம், கடந்த ஜுலை 01-ம் தேதி முதல் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் நீங்கலாக, அனைத்து சாதாரணப் பேருந்துகளிலும் "சாதாரண கட்டணம் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5" என ஸ்டிக்கர் வில்லைகள் பேருந்தின் முன்புற முகப்புக் கண்ணாடி மற்றும் பின்புற கண்ணாடிகளில் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருவதால் இப்பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.