பார்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் சடலமாகக் கிடந்த 9 வயது மதிக்கத்தக்க புலி : வனத்துறையினர் விசாரணை

நீலகிரி : உதகை அருகே உள்ள பார்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் 8 முதல் 9 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : உதகை அருகே உள்ள பார்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் 8 முதல் 9 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நீலகிரி மாவட்டம் உதகையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பார்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் 8 முதல் 9 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



இது குறித்து மாவட்ட வன அதிகாரி கூறும்போது, "இந்த புலி இறந்ததற்கான காரணம் என்ன..? ஆந்தராக்ஸ் போன்ற நோயினாலா..? அல்லது மற்ற வன விலங்குகளின் தாக்குதலாலா..? அல்லது யாரேனும் விஷம் வைத்து கொன்றார்களா என்பது குறித்து பிரேத பரிசோதனைக்குப் பின் விவரம் தெரிய வரும்," என்றார். மேலும், புலி இறந்தது குறித்து விசாரணை நடைபெறும் என மாவட்ட வன அதிகாரி குருசாமி தாளம் தெரிவித்தார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...