கோவை : புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுடேஸ்வரி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோவை : புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுடேஸ்வரி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 69-வது வார்டில் புறம்போக்கு நிலத்தை ஆக்கரமித்து, அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கோவில் கட்ட முயற்சிப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறாக குறிப்பிட்ட சமூகத்தால் கட்டப்படும் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஒண்டிப்புதூர் சவுடேஸ்வரி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனு அளித்த பின்னர் அவர்கள் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புறம்போக்கு நிலத்தை ஆக்கரமித்து, அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கோவில் கட்டுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என அப்போது வலியுறுத்தினர்.