கோவை : கணியூர் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
கோவை : கணியூர் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

வண்ண உடைகளை உடுத்தி அமர்ந்தும், நிமிர்ந்தும் இலவகமாக வளைந்தும் ஆடும் இந்த கலைதான் ஒயிலாட்டம். தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவும், கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமான இந்த ஒயிலாட்டத்தை, தற்போது கொங்கு மண்டல மக்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர், சந்தோஷ் நகர் பகுதியில் ஒயிலாட்ட அரங்கேற்றம் இன்று நடைபெற்றது. இதில் 3 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறியவர்கள் என 60 நபர்கள் அரங்கேற்றம் செய்தனர். அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கனகராஜ், இலவசமாக கிராமந்தோறும் சென்று ஒயிலாட்ட கலையை வளர்த்து வருகிறார்.

கிராமிய பாடலுடன் மெதுவாக ஆரம்பித்து வேகமெடுக்கும் ஒயிலாட்டம், தொடர்ச்சியாக 3 மணி நேரம் நடைபெற்றது. ஒயிலாட்டம் ஆடும் போது, உடலையும், உள்ளத்தையும் ஒருங்கிணைந்து புத்துணர்வு ஏற்படுவதாக கலைஞர்கள் கூறுகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் கலைஞர்கள் உருவாகி இருப்பதாகவும், வரும் மாதங்களில் இந்த கலையை பல நாடுகளில் பரப்பும் வகையில், அங்கு சென்று ஒயிலாட்ட நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும், இந்த கலையை தமிழர்கள் உள்ள நாடுகளில் பரப்ப திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் கனகராஜ் தெரிவித்தார்.


வண்ண உடைகளை உடுத்தி அமர்ந்தும், நிமிர்ந்தும் இலவகமாக வளைந்தும் ஆடும் இந்த கலைதான் ஒயிலாட்டம். தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவும், கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமான இந்த ஒயிலாட்டத்தை, தற்போது கொங்கு மண்டல மக்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர், சந்தோஷ் நகர் பகுதியில் ஒயிலாட்ட அரங்கேற்றம் இன்று நடைபெற்றது. இதில் 3 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறியவர்கள் என 60 நபர்கள் அரங்கேற்றம் செய்தனர். அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கனகராஜ், இலவசமாக கிராமந்தோறும் சென்று ஒயிலாட்ட கலையை வளர்த்து வருகிறார்.

கிராமிய பாடலுடன் மெதுவாக ஆரம்பித்து வேகமெடுக்கும் ஒயிலாட்டம், தொடர்ச்சியாக 3 மணி நேரம் நடைபெற்றது. ஒயிலாட்டம் ஆடும் போது, உடலையும், உள்ளத்தையும் ஒருங்கிணைந்து புத்துணர்வு ஏற்படுவதாக கலைஞர்கள் கூறுகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் கலைஞர்கள் உருவாகி இருப்பதாகவும், வரும் மாதங்களில் இந்த கலையை பல நாடுகளில் பரப்பும் வகையில், அங்கு சென்று ஒயிலாட்ட நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும், இந்த கலையை தமிழர்கள் உள்ள நாடுகளில் பரப்ப திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் கனகராஜ் தெரிவித்தார்.
