கோவை : கோவையில் முகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில், இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பதிவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோவை : கோவையில் முகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில், இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பதிவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாநகர காவல்துறையினர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல, முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், மற்ற மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவிடுபவர்களையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், கண்காணிக்கப்படும் நபர்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை இராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான கருணாநிதி நகரில் வசித்து வரும் பழனிச்சாமியின் மகன் மணிகண்டன் (37) என்பவர் தனது முகநூலில் ஹிந்து, முஸ்லிம் மதத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், குறிப்பிட்ட மதத்தினரை கொலை செய்து விடுவேன் எனவும் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில், இராமநாதபுரம் காவல் ஆய்வாளர் லதாவின் தலைமையிலான குழுவினர் இந்து அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். மேலும், இவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டல், மதக் கலவரத்தை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் இது போன்று முகநூல் வாட்ஸப்கள் மூலம் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் எவரேனும் செயல்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கோவை மாநகர காவல்துறையினர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல, முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், மற்ற மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவிடுபவர்களையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், கண்காணிக்கப்படும் நபர்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை இராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான கருணாநிதி நகரில் வசித்து வரும் பழனிச்சாமியின் மகன் மணிகண்டன் (37) என்பவர் தனது முகநூலில் ஹிந்து, முஸ்லிம் மதத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், குறிப்பிட்ட மதத்தினரை கொலை செய்து விடுவேன் எனவும் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில், இராமநாதபுரம் காவல் ஆய்வாளர் லதாவின் தலைமையிலான குழுவினர் இந்து அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். மேலும், இவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டல், மதக் கலவரத்தை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் இது போன்று முகநூல் வாட்ஸப்கள் மூலம் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் எவரேனும் செயல்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.