உதகையில் வளர்ப்பு நாய் கடித்ததை தட்டிக் கேட்கச் சென்ற மக்களை நாயை விட்டு விரட்டிய பெண்மணி

நீலகிரி : உதகையில் வளர்ப்பு நாய் கடித்ததால் தட்டிக் கேட்டவர்களை நாயை விட்டுத் துரத்தி அடித்த பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி : உதகையில் வளர்ப்பு நாய் கடித்ததால் தட்டிக் கேட்டவர்களை நாயை விட்டுத் துரத்தி அடித்த பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை கணேஷ் தியேட்டர் அருகே இன்று மாலை கோவா பதிவு எண் கொண்ட காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். காரில் அவரது குழந்தையும், ராட்வீலர் ரக நாயும் இருந்தது. காரில் இருந்து இறங்கிய அந்த பெண் அருகே இருக்கும் சலவை கடைக்கு சென்றார். அப்போது, விஜய் என்பவர் காரை கடந்து செல்லும் போது, காருக்குள் இருந்த நாய் விஜியின் தோள்பட்டையை கடித்து குதறியது. இதனால், விஜியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு கூடினர். இது குறித்து கேட்டபோது, அந்தப் பெண் கோபம் அடைந்து அவரை ஆங்கிலத்தில் வசைபாடியவாறே, காருக்குள் இருந்த நாயை வெளியே கொண்டு வந்து அவரையும் பயமுறுத்தினார். 



இந்த சம்பவத்தால் கோபமடைந்த பொதுமக்கள் பெண்ணின் காரை வெளியே செல்லவிடாமல் ஜாக்கி வைத்து ஏற்றி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வருவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் மீண்டும் மீண்டும் நாயை ஏவவிட்டு பொதுமக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தார். இதனால், பொதுமக்கள் தற்காப்புக்காக கல் மற்றும் கட்டைகளுடன் ஆத்திரத்தில் இருந்தனர். ஒரு வழியாக வந்த காவல் துறையினர், காயம்பட்ட விஜய்யை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அந்த பெண்ணை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...