நீலகிரி : ரூ. 5 செலுத்தினால் ஒரு லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையிலான ஏ.டி.எம். மையங்கள் உதகையில் 20 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி : ரூ. 5 செலுத்தினால் ஒரு லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையிலான ஏ.டி.எம். மையங்கள் உதகையில் 20 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 29-ந் தேதி வெளியிட்ட உத்தரவில், நீலகிரியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு உள்ள குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட எல்லைகளில் அமைந்து உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, நாடுகாணி, தாளூர், சோளாடி, பாட்டவயல், கெத்தை உள்பட அனைத்து சோதனைச்சாவடிகள் (மாவட்டத்தின் நுழைவுவாயில்) முதல் உதகை வரையிலான நெடுஞ்சாலைகளில் அமைந்து உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினம் முதல் தடை விதிக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் பொருட்டு, சுத்திகரிக்கும் குடிநீர் எந்திரங்களை தற்போது பொருத்தவும், அடுத்த கட்டமாக அனைத்து இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது :- மாவட்ட நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக குடிநீர் ஏ.டி.எம். உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நகராட்சி மூலம் ரூ. 1½ லட்சம் செலவில் குடிநீர் ஏ.டி.எம். அமைக்கும் பணி துவங்கியுள்ளது. ஐந்து ரூபாய் நாணயத்தை செலுத்தினால், ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்துக்கொள்ளும் வகையில், வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் நெடுஞ்சாலைகள் மற்றும் உதகை நகரில் முக்கியமான 20 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 29-ந் தேதி வெளியிட்ட உத்தரவில், நீலகிரியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு உள்ள குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட எல்லைகளில் அமைந்து உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, நாடுகாணி, தாளூர், சோளாடி, பாட்டவயல், கெத்தை உள்பட அனைத்து சோதனைச்சாவடிகள் (மாவட்டத்தின் நுழைவுவாயில்) முதல் உதகை வரையிலான நெடுஞ்சாலைகளில் அமைந்து உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினம் முதல் தடை விதிக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் பொருட்டு, சுத்திகரிக்கும் குடிநீர் எந்திரங்களை தற்போது பொருத்தவும், அடுத்த கட்டமாக அனைத்து இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது :- மாவட்ட நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக குடிநீர் ஏ.டி.எம். உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நகராட்சி மூலம் ரூ. 1½ லட்சம் செலவில் குடிநீர் ஏ.டி.எம். அமைக்கும் பணி துவங்கியுள்ளது. ஐந்து ரூபாய் நாணயத்தை செலுத்தினால், ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்துக்கொள்ளும் வகையில், வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் நெடுஞ்சாலைகள் மற்றும் உதகை நகரில் முக்கியமான 20 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.