கோவை : பெண்கள் சப்-ஜுனியருக்கான தேசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் கோவையைச் சேர்ந்த பி.எஸ். சந்திரமுகி என்ற வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
கோவை : பெண்கள் சப்-ஜுனியருக்கான தேசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் கோவையைச் சேர்ந்த பி.எஸ். சந்திரமுகி என்ற வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

10-வது சப்-ஜுனியருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள ரூர்க்கி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாநில அளவிலான இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 57 கி. - 60 கி. எடைப் பிரிவில் கோவையைச் சேர்ந்த இளம் வீராங்கனை பி.எஸ். சந்திரமுகி பங்கேற்றார். அதில், திறமையாக விளையாடிய அவர் தங்கத்தைத் தனதாக்கிக் கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

10-வது சப்-ஜுனியருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள ரூர்க்கி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாநில அளவிலான இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 57 கி. - 60 கி. எடைப் பிரிவில் கோவையைச் சேர்ந்த இளம் வீராங்கனை பி.எஸ். சந்திரமுகி பங்கேற்றார். அதில், திறமையாக விளையாடிய அவர் தங்கத்தைத் தனதாக்கிக் கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.