கோவை : 2020-ம் ஆண்டுக்குள் கோவையில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக பேட்டரி பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
கோவை : 2020-ம் ஆண்டுக்குள் கோவையில் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக பேட்டரி பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டது. அந்த வகையில், முதற்கட்டமாக 100 பேட்டரி பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், கோவை மாநகரில் 20 பேருந்துகளை இயக்கி பரிசோதிக்க முடிவு செய்துள்ளதாக மூத்த போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டியிடம் அவர் கூறுகையில், "பேட்டரி பேருந்துகள் விமானநிலையங்களில் இயக்கப்படும் பேருந்துகளைப் போன்றே இருக்கும். ஏ.சி. உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்டிருக்கும். மேலும், டீசல் பேருந்துகளை விட இதில் குறைவான அளவே சீட்டுகள் இருக்கும். அதாவது, 36-40 சீட்டுகளே அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பேருந்துகளின் தயாரிப்பு விலை ரூ. 1 கோடியாகும். தமிழ அரசு - ஜெர்மனியைச் சேர்ந்த கே.எஃப்.டபூள்யூ.வுடன் (Kreditanstalt fur Weideraufbau) இணைந்து இந்தப் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அநேகமாக 2020-ம் ஆண்டுக்குள் இந்தப் பேருந்துகள் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் மற்றும் மற்ற பகுதிகளில் உள்ள சாலைகளின் தன்மை பொருத்து இந்தப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
இந்தப் பேருந்துகளில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்வதற்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பெங்களூரூவிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். மத்திய அரசின் உதவியுடன் வரும் ஆண்டுகளில் 1,300 பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரும் உதவியாக இருக்கும்," என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் டீசல் பேருந்துகளுக்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டது. அந்த வகையில், முதற்கட்டமாக 100 பேட்டரி பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், கோவை மாநகரில் 20 பேருந்துகளை இயக்கி பரிசோதிக்க முடிவு செய்துள்ளதாக மூத்த போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டியிடம் அவர் கூறுகையில், "பேட்டரி பேருந்துகள் விமானநிலையங்களில் இயக்கப்படும் பேருந்துகளைப் போன்றே இருக்கும். ஏ.சி. உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்டிருக்கும். மேலும், டீசல் பேருந்துகளை விட இதில் குறைவான அளவே சீட்டுகள் இருக்கும். அதாவது, 36-40 சீட்டுகளே அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பேருந்துகளின் தயாரிப்பு விலை ரூ. 1 கோடியாகும். தமிழ அரசு - ஜெர்மனியைச் சேர்ந்த கே.எஃப்.டபூள்யூ.வுடன் (Kreditanstalt fur Weideraufbau) இணைந்து இந்தப் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அநேகமாக 2020-ம் ஆண்டுக்குள் இந்தப் பேருந்துகள் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் மற்றும் மற்ற பகுதிகளில் உள்ள சாலைகளின் தன்மை பொருத்து இந்தப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
இந்தப் பேருந்துகளில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்வதற்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பெங்களூரூவிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். மத்திய அரசின் உதவியுடன் வரும் ஆண்டுகளில் 1,300 பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரும் உதவியாக இருக்கும்," என்றார்.