கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரும்பாலான திட்டங்களை அமல்படுத்தியதால் தமிழக அளவில் சிறந்த நகராக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரும்பாலான திட்டங்களை அமல்படுத்தியதால் தமிழக அளவில் சிறந்த நகராக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கனவு திட்டங்களில் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை, சென்னை, மதுரை, திருச்சி உள்பட 14 நகரங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து மாதந்தோறும் மறுஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிக திட்டங்களை அமல்படுத்தியதால் கோவை முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, ரூ. 978.6 கோடி மதிப்பிலான 43 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கோவை மாநகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை 40 திட்டங்களை செயலாக்கம் செய்துள்ளது.
மத்திய அரசின் கனவு திட்டங்களில் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை, சென்னை, மதுரை, திருச்சி உள்பட 14 நகரங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து மாதந்தோறும் மறுஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிக திட்டங்களை அமல்படுத்தியதால் கோவை முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, ரூ. 978.6 கோடி மதிப்பிலான 43 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கோவை மாநகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை 40 திட்டங்களை செயலாக்கம் செய்துள்ளது.