குனியமுத்தூர் செங்குளத்தை பாழாக்கும் மர்ம நபர்கள் : மருத்துவக் கழிவுகளை கொட்டி செல்லும் அவலம்

கோவை : குனியமுத்தூர் செங்குளத்தில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகள் கொட்டி செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை : குனியமுத்தூர் செங்குளத்தில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகள் கொட்டி செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோடைக்குப் பின் வரும் பருவமழை காரணமாக குளங்கள் அனைத்தும் தூர்வாரும் முயற்சியிலும், சுத்தம் செய்யும் பணியிலும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். தற்போது, பருவமழை துவங்கி உள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோவை மாநகர் பகுதியில் உள்ள குறிச்சி குளம், குனியமுத்தூர் செங்குளம், உக்கடம் குளம் என நீர்நிலைகளில் நீர் வர துவங்கி உள்ளது. 



இந்நிலையில், குனியமுத்தூர் செங்குளத்தில் கடந்த சில தினங்களாக காலாவதியான மருந்துகள், பஞ்சு, ஊசிகள் பேன்ற மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால், நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குளங்களை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் தனியார் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தாலும், குளங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.



இதனிடையே, கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும், கழிவுகள் கொட்டி செல்லும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...