கோவையில் போக்குவரத்து போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உருண்டு இருவர் ஆர்ப்பாட்டம்

கோவை : சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு பேர் சாலையில் படுத்து உருண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கோவை : சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு பேர் சாலையில் படுத்து உருண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை சாய்பாபாகோவில் பகுதியில் நேற்று மாலை போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்தக் சமயம், தலைகவசம் அணியாமல் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பழனி மற்றும் புரோட்டா மாஸ்டர் மூர்த்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, காவலர்கள் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழனி, மூர்த்தி ஆகியோர் சாலையின் நடுவே படுத்து போராட்டம் நடத்தினர். மேலும், போலீசார் டிராபிக்கினை மதிப்பதாக இருந்தால், எல்லோரையும் சோதனை பண்ண வேண்டுமெனக் கூறி சாலையின் நடுவே படுத்து உருண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் பிரதாப் கூறும்போது ;- சாய்பாபாகாலனி போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தடுத்து நிறுத்தி வாகன பரிசோதனை செய்வது போல, தனியார் பேருந்துகளின் அட்டகாசங்களை கண்டுகொள்வதில்லை. சாய்பாபாகோவில் மேட்டுப்பாளையம் சாலைகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்கின்றன. அதனால், பல்வேறு விபத்துக்களும் நடைபெறுகிறது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் போக்குவரத்து விதிகளுக்கு விலக்கு அளித்து இருப்பது சக மக்கள் மத்தியில் அதிருப்தியை உள்ளது, என தெரிவித்தார்.

இருசக்கர வாகனத்தில் வருபவர்களை சோதனை செய்து அபராதம் விதிப்பது போல, அதிவேகமாக பேருந்தை இயக்கி, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி, அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி சட்ட விதி மீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் மீதும் நடவடிக்கை எடுத்தால் நடுநிலையாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...