டெல்லி : கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள கோவை - நீலகிரி சாலைப் பணிகளை செயல்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நீலகிரி எம்.பி. ஆ.ராசா நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
டெல்லி : கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள கோவை - நீலகிரி சாலைப் பணிகளை செயல்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நீலகிரி எம்.பி. ஆ.ராசா நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி. ஆ.ராசா நேற்று சந்தித்தார். அப்போது, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் நிதின் கட்கரிக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், கோவையில் இருந்து நீலகிரிக்கு செல்லும் போக்குவரத்து திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அவற்றை செயல்படுத்தக் கோரி மனு அளித்தார். மேலும், அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :- கோவை முதல் சத்தியமங்கலம் (65 கிமீ) சாலை, கிழக்கு பைபாஸ் ரோடு (54 கிமீ), கோவை - கரூர் (114 கிமீ), எல்&டி பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாலை போக்குவரத்து பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
மேலும், 2024ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆகவே, பொருளாதார மேம்பாட்டில் கோவை மாவட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் பங்கு இருக்கிறது. வர்த்தக ரீதியில் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கோவை போன்ற பகுதிகளின் தரம் உயர்த்தப்படுவதின் மூலம் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி. ஆ.ராசா நேற்று சந்தித்தார். அப்போது, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் நிதின் கட்கரிக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், கோவையில் இருந்து நீலகிரிக்கு செல்லும் போக்குவரத்து திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அவற்றை செயல்படுத்தக் கோரி மனு அளித்தார். மேலும், அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :- கோவை முதல் சத்தியமங்கலம் (65 கிமீ) சாலை, கிழக்கு பைபாஸ் ரோடு (54 கிமீ), கோவை - கரூர் (114 கிமீ), எல்&டி பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாலை போக்குவரத்து பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
மேலும், 2024ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆகவே, பொருளாதார மேம்பாட்டில் கோவை மாவட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் பங்கு இருக்கிறது. வர்த்தக ரீதியில் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கோவை போன்ற பகுதிகளின் தரம் உயர்த்தப்படுவதின் மூலம் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.