வரத்து அதிகரிப்பால் குன்னூர் ஏல மையத்தில் தேயிலைகள் தேக்கம் : விலையும் வீழ்ச்சி

நீலகிரி : குன்னூர் தேயிலை ஏல மையத்தில் வரத்து அதிகரிப்பால் 22 சதவீத தேயிலைகள் தேக்கமடைந்தன. மேலும், 3 ரூபாய் வரையில் விலையும் வீழ்ச்சியடைந்திருப்பது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

நீலகிரி : குன்னூர் தேயிலை ஏல மையத்தில் வரத்து அதிகரிப்பால் 22 சதவீத தேயிலைகள் தேக்கமடைந்தன. மேலும், 3 ரூபாய் வரையில் விலையும் வீழ்ச்சியடைந்திருப்பது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைகளின் ஏலம் இன்று காலை துவங்கிய மாலை வரை ஆன்லைனில் நடைபெற்றது. இந்த ஏலத்தில், மொத்தம் 19 லட்சத்து 77 ஆயிரம் கிலோ சி.டி.சி. ரகமும், 41 ஆயிரம் கிலோ ஆர்தோடக்ஸ் வகை தேயிலைகள் ஏலத்திற்கு வந்தன. சராசரியாக ஒரு கிலோ குறைந்தது ரூ. 79 முதல் ரூ. 80 வரை விலை போனது. ஏலத்தின் இறுதியில் 78 சதவீதம் தேயிலை மட்டுமே விற்பனையானது. 22 சதவீதம் தேயிலைகள் தேக்கமடைந்தன. இந்த ஏலத்தில், எகிப்து, பாகிஸ்தான், ஈரான் போன்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த தேயிலை வர்த்தகர்களின் பங்கேற்பு அதிகம் இருந்த போதிலும், வரத்து அதிகரிப்பால் தேக்கநிலை காணப்பட்டது.



தற்போது, நீலகிரியில் சாரல் மழை பெய்து வருவதாலும், தேயிலை செடிகளுக்கு ஏற்ற காலநிலைக் காணப்படுவதால், பசும் தேயிலை வளர்ச்சி அதிகரித்து, உற்பத்தியும் அதிகரித்தது. இதனால், தேயிலை ஏலத்தில் தேக்கநிலை ஏற்பட்டு, விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...