நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஆனைப்பள்ளம் அருகே சின்னாளகோம்பை சேர்ந்த முதியவர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஆனைப்பள்ளம் அருகே சின்னாளகோம்பை சேர்ந்த முதியவர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஆனைப்பள்ளம் சின்னாளகம்பை ஆதிவாசி கிராமத்தை சுற்றிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அண்மைக் காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், ஆனைப் பள்ளத்தில் இருந்து அருகே உள்ள பில்லூர் மட்டம் கடைக்கு சென்று நேற்று இரவு மாரிசெல்வன் திரும்பியுள்ளார். ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு பகுதிகளிலும் பகல் முழுவதும் தேடினர்.
இதனைத் தொடர்ந்து, யானைப் பள்ளம் அருகே யானை தாக்கி முதியவர் மாரிசெல்வன் உயிரிழந்த கிடப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஆனைப்பள்ளம் சின்னாளகம்பை ஆதிவாசி கிராமத்தை சுற்றிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அண்மைக் காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், ஆனைப் பள்ளத்தில் இருந்து அருகே உள்ள பில்லூர் மட்டம் கடைக்கு சென்று நேற்று இரவு மாரிசெல்வன் திரும்பியுள்ளார். ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு பகுதிகளிலும் பகல் முழுவதும் தேடினர்.
இதனைத் தொடர்ந்து, யானைப் பள்ளம் அருகே யானை தாக்கி முதியவர் மாரிசெல்வன் உயிரிழந்த கிடப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.