இரவு நேரங்களில் காந்திபுரம் - சிங்காநல்லூர் செல்லும் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

கோவை : காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் பயனிகளிடம் இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.


கோவை : காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் பயனிகளிடம் இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.



கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (42). இவர் கடந்த வெள்ளிக்கிழமை கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்திலிருந்து சிங்காநல்லூர் செல்ல தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். ரூ.9 டிக்கெட்டிற்கு அவரிடம் ரூ.15 வாங்கியதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் புகார் மனு அளித்தார்.



இது குறித்து அவர் கூறுகையில், “வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் இவ்வாறு தான் பயணிகளிடம் அதிகம் வசூலிக்கின்றனர். அரசு பேருந்தில் செல்லும் போது ரூ.9 கொடுத்து டிக்கெட் வாங்கினேன். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் செல்வதை கூறிவைத்து திட்டமிட்டே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நான் லக்கேஜ் கொண்டு செல்லாத போதும் லக்கேஜ் என டிக்கெட்டில் போட்டு நூதன முறையில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள். மேலும், நான் இரவு 9.45 மணிக்கு பேருந்து ஏறிய நிலையில், எனக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டில் இரவு 10.13 என நேரம் பதிவாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...