3 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குறை தீர்ப்பு முகாமை நடத்திய கோவை மாநகராட்சி

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளை உடனடியாக பூர்த்தி செய்யும் வகையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியின் சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.


கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளை உடனடியாக பூர்த்தி செய்யும் வகையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியின் சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.



கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அவர் பேசியதாவது :- மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. எங்களால் முடிந்தவரை மக்களின் பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுப்போம். ஆனால், எதிர்மறையான பதில்களை அளிக்க மாட்டோம். பெறப்படும் புகார்களின் மீது அன்றைய தினமே நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.



இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டியிடம் கோவை மாநகராட்சி ஆணையர் பேசுகையில், “உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு புதன்கிழமைகளின் காலையிலும் மக்கள் எங்களை தொடர்பு கொண்டு மனு அளிக்கலாம். 



மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான பிரச்சனைகளை மக்கள்தான் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எனவே, பொதுமக்கள் இந்த குறை தீர்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...