கோவை : கோவையில் வங்கி அதிகாரிகள் துணையுடன் தனியார் நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ. 6 கோடியை கையாடல் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை : கோவையில் வங்கி அதிகாரிகள் துணையுடன் தனியார் நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ. 6 கோடியை கையாடல் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை - அவினாசி சாலை கருமத்தம்பட்டியில் தனலட்சுமி ஸ்பிண்டெக்ஸ் என்ற பெயரில் நடராஜன் மற்றும் அவரது மனைவி லீலாவதி ஆகியோர் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்த போது, வங்கியில் கையிருப்பாக வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் உட்பட 6 கோடி ரூபாய் வரை குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவில் நடராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்த கண்ணன் மற்றும் கணக்காளர் விவேக்குமார் என்கிற வினோத் ஆகிய இருவரும் முறைகேடாக நிறுவன நிதியை தங்களது மனைவி பெயர்களுக்கு மாற்றம் செய்தது தெரியவந்தது.

இதற்கு நிறுவனத்தின் கணக்குகள் வைத்திருந்த திருச்சி சாலை தமிழ்நாடு வங்கியின் துணை பொதுமேலாளர் சிவசுப்ரமணியம் மற்றும் மேலாளர் சிவசந்திரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கண்ணன் மற்றும் விவேக்கை கைது செய்துள்ள போலீசார் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வங்கி அதிகாரிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக உரிமையாளரின் உறவினர் ராம்குமார் கூறுகையில், "பல கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுவதால் ரூ. 6 கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றதை அரிய காலதாமதம் ஏற்பட்டது. நம்பிக்கை அடிப்படையில் அளித்த வசதிகளை கண்ணன் மற்றும் வினோத் ஆகியோர் தவறாக பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்," எனக் கூறினார்.
கோவை - அவினாசி சாலை கருமத்தம்பட்டியில் தனலட்சுமி ஸ்பிண்டெக்ஸ் என்ற பெயரில் நடராஜன் மற்றும் அவரது மனைவி லீலாவதி ஆகியோர் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்த போது, வங்கியில் கையிருப்பாக வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் உட்பட 6 கோடி ரூபாய் வரை குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவில் நடராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்த கண்ணன் மற்றும் கணக்காளர் விவேக்குமார் என்கிற வினோத் ஆகிய இருவரும் முறைகேடாக நிறுவன நிதியை தங்களது மனைவி பெயர்களுக்கு மாற்றம் செய்தது தெரியவந்தது.

இதற்கு நிறுவனத்தின் கணக்குகள் வைத்திருந்த திருச்சி சாலை தமிழ்நாடு வங்கியின் துணை பொதுமேலாளர் சிவசுப்ரமணியம் மற்றும் மேலாளர் சிவசந்திரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கண்ணன் மற்றும் விவேக்கை கைது செய்துள்ள போலீசார் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வங்கி அதிகாரிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக உரிமையாளரின் உறவினர் ராம்குமார் கூறுகையில், "பல கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுவதால் ரூ. 6 கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றதை அரிய காலதாமதம் ஏற்பட்டது. நம்பிக்கை அடிப்படையில் அளித்த வசதிகளை கண்ணன் மற்றும் வினோத் ஆகியோர் தவறாக பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்," எனக் கூறினார்.