யுவபாரதி பப்ளிக் ஸ்கூலில் வனவிலங்கு புகைப்பட கண்காட்சி தொடக்கம்

கோவை : வனவிலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக யுவபாரதி பப்ளிக் ஸ்கூலில் வனவிலங்கு புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

கோவை : வனவிலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக யுவபாரதி பப்ளிக் ஸ்கூலில் வனவிலங்கு புகைப்பட கண்காட்சி தொடங்கியது. 



சோமையம்பாளையத்தில் உள்ள யுவபாரதி பப்ளிக் ஸ்கூலில் சிந்தனை வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கண்காட்சி நடைபெற்றது. இந்த வாரம் முழுவதும் நடக்கும் இந்த விழாவில், புதிய சிந்தனைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த வனவிலங்கு புகைப்பட கண்காட்சியை மாவட்ட வனத்துறை அதிகாரி டி. வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். அப்போது, தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டதை மாணவர்களிடையே அவர் தெரிவித்தார். மேலும், வனவிலங்குகளைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்த வன அதிகாரி டி. வெங்கடேஷ், இது தொடர்பான விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.



முன்னதாக, முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரி சி. பத்ரசாமி, ஐ.எஃப்.எஸ். அதிகாரியாவதற்கான நுணுக்கங்களைப் பற்றி மாணவர்களிடையே விளக்கிக் கூறினார். 

Newsletter

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...