சென்னை : அ.ம.மு.க.வை சேர்ந்த இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகி, வரும் 6-ம் தேதி அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அ.ம.மு.க.வை சேர்ந்த இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகி, வரும் 6-ம் தேதி அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.ம.மு.க.வில் இருந்து இசக்கி சுப்பையா விலக போகிறார் என்று நேற்றே தகவல் வெளியானது. இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாளை அதாவது இன்று தனது அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று இசக்கி சுப்பையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- சில நிமிடங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. தினகரன் கிண்டல் செய்தார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல. டி.டி.வி. தினகரன் பதற்றத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தோம். டிடிவி தினகரனே தொண்டர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்தான். ஜூலை 6-ம் தேதி அ.தி.மு.க.வில் 20 ஆயிரம் தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதலமைச்சராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். சுயநலம் பார்ப்பதாக இருந்தால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதாவில் சேர்ந்து இருப்பேன், இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அசோக் நகரில் அ.ம.மு.க. தலைமை அலுவலகம் இருக்கும் இடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
அ.ம.மு.க.வில் இருந்து இசக்கி சுப்பையா விலக போகிறார் என்று நேற்றே தகவல் வெளியானது. இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாளை அதாவது இன்று தனது அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று இசக்கி சுப்பையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- சில நிமிடங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. தினகரன் கிண்டல் செய்தார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல. டி.டி.வி. தினகரன் பதற்றத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தோம். டிடிவி தினகரனே தொண்டர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்தான். ஜூலை 6-ம் தேதி அ.தி.மு.க.வில் 20 ஆயிரம் தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதலமைச்சராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். சுயநலம் பார்ப்பதாக இருந்தால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதாவில் சேர்ந்து இருப்பேன், இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அசோக் நகரில் அ.ம.மு.க. தலைமை அலுவலகம் இருக்கும் இடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.