மேட்டுப்பாளையத்தில் 50 ஆண்டுகள் பழமையான புனித அந்தோனியார் ஆலயத் தேர்திருவிழா கோலாகலம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் அமைந்துள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் தேர் திருவிழா கடந்த 23-ம் தேதி கொடி ஏற்று நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த ஒரு வாரமாக காலை, மாலை என ஆலயத்தில் சிறப்பு திருப்பலி எழுச்சி நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தோனியார் திருத்தேருக்கு ஆலய பங்கு பாதிரியார் ரொசாரியோ சிறப்பு பூஜைகள் செய்து திருத்தேரின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 



ஆலயத்திலிருந்து தொடங்கிய இந்த திருத்தேரானது மேட்டுப்பாளையம் நகரத்தின் முக்கிய சாலையான உதகை சாலை, சிறுமுகை சாலை என பேருந்து நிலையம் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...