கோவை: கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதியில் அறிவிக்கப்படாத திடீர் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவிகள் விடுதி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
கோவை: கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதியில் அறிவிக்கப்படாத திடீர் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவிகள் விடுதி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
கோவை - அவிநாசி சாலையில் ஒய்.டபிள்யூ.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வருகின்றனர். மேலும், இந்த விடுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் உள்ளனர். இந்த நிலையில், விடுதி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென விடுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறி நேற்று மாலை முதல் விடுதியில் உள்ள பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒரே ஆண்டில் இரண்டு முறை கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும், ஆனால், கட்டண உயர்வுக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் ஏதும் இந்த விடுதியில் இல்லை என இந்த விடுதியில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, விடுதியில் இருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அறிந்த பந்தய சாலை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விடுதி நிர்வாகத்தினரையும் வரவழைத்த காவல்துறையினர் இருதரப்பினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக உடன்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், நிர்வாக தரப்பினர் நிரந்தர தீர்வு காணப்படும் என காவல்துறையினர் முன்னிலையில் மாணவிகளிடம் உறுதியளித்தனர். இரவு நேரத்தில் மாணவிகள் விடுதி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை - அவிநாசி சாலையில் ஒய்.டபிள்யூ.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வருகின்றனர். மேலும், இந்த விடுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் உள்ளனர். இந்த நிலையில், விடுதி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென விடுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறி நேற்று மாலை முதல் விடுதியில் உள்ள பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒரே ஆண்டில் இரண்டு முறை கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும், ஆனால், கட்டண உயர்வுக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் ஏதும் இந்த விடுதியில் இல்லை என இந்த விடுதியில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, விடுதியில் இருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அறிந்த பந்தய சாலை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விடுதி நிர்வாகத்தினரையும் வரவழைத்த காவல்துறையினர் இருதரப்பினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக உடன்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், நிர்வாக தரப்பினர் நிரந்தர தீர்வு காணப்படும் என காவல்துறையினர் முன்னிலையில் மாணவிகளிடம் உறுதியளித்தனர். இரவு நேரத்தில் மாணவிகள் விடுதி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.