வரும் 3-ம் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ வரும் 3-ம் தேதி முதல் இனி வரும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ வரும் 3-ம் தேதி முதல் இனி வரும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ வரும் 03-ம் தேதி காலை 8 மணி முதல்‌ 11 மணி வரை அனைத்து வார்டுகளைச்‌ சேர்ந்த பொதுமக்களின்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ நடைபெறுகிறது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்ன ராமசாமி முன்னிலை வகிப்பார்கள்‌. கோவை மாநகராட்சியின்‌ 100 வார்டுகளைச்‌ சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற கோரிக்கை மனுக்களின்‌ மீது சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

பொதுமக்கள்‌ தங்கள்‌ பகுதியில்‌ மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, சுகாதாரம்‌ போன்ற அடிப்படை வசதிகள்‌ குறித்தும்‌ மற்றும்‌ கோரிக்கைகளையும்‌ இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌திடம் நேரில்‌ அளிக்கலாம்‌. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சியின்‌ அனைத்து அலுவலர்கள்‌ மாநகர பொறியாளர்‌ மற்றும்‌ அனைத்து மண்டல உதவி ஆணையாளாரகள்‌, சுகாதாரத்துறை, கல்வித்துறை அலுவலர்கள்‌ உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள்‌ கலந்து கொள்வார்கள்‌.

மேலும்‌, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டங்கள்‌ ஒவ்வொரு வாரமும்‌ புதன்கிழமைகளில்‌ நடைபெறும்‌. பொதுமக்கள்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள்‌ கோரிக்கை மனுக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...