கோவை : குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்பட்ட வீடுகள் தரமானதாக இல்லை எனவும், மாற்று இடம் வழங்க வலியுறுத்தி உக்கடம் கழிவுநீர் பண்னை அருகே வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்பட்ட வீடுகள் தரமானதாக இல்லை எனவும், மாற்று இடம் வழங்க வலியுறுத்தி உக்கடம் கழிவுநீர் பண்னை அருகே வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிக்கு வழங்கப்பட்டது. ஆறு மாடிகளாக கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு மாடி சரிந்து விழுந்தது. மேலும், இங்கு சுகாதாரமற்ற சூழல் உள்ளதால், மாற்று இடம் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து பயனாளிகள் கூறுகையில், "உக்கடம் கழிவுநீர் பண்ணையில் தினமும் 100 லாரிகளில் கழிவுநீர் கொட்டப்படுவதோடு, குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரமற்ற நிலையில் மக்கள் வசித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் அலட்சியம் காட்டுகின்றனர். மேலும், இங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களை விட வாடகைக்கும், போகியத்திற்கும் அதிகளவில் வெளி ஆட்கள் உள்ளனர். கழிவுநீர் பண்ணை அருகே ஒதுக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தரமாக இல்லாமலும், சுகாதார சீர்கேடுகள் நிறைந்த இடமாக இருப்பதால், தங்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம், என தெரிவித்தனர்.
கோவை உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிக்கு வழங்கப்பட்டது. ஆறு மாடிகளாக கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு மாடி சரிந்து விழுந்தது. மேலும், இங்கு சுகாதாரமற்ற சூழல் உள்ளதால், மாற்று இடம் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து பயனாளிகள் கூறுகையில், "உக்கடம் கழிவுநீர் பண்ணையில் தினமும் 100 லாரிகளில் கழிவுநீர் கொட்டப்படுவதோடு, குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரமற்ற நிலையில் மக்கள் வசித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் அலட்சியம் காட்டுகின்றனர். மேலும், இங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களை விட வாடகைக்கும், போகியத்திற்கும் அதிகளவில் வெளி ஆட்கள் உள்ளனர். கழிவுநீர் பண்ணை அருகே ஒதுக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தரமாக இல்லாமலும், சுகாதார சீர்கேடுகள் நிறைந்த இடமாக இருப்பதால், தங்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம், என தெரிவித்தனர்.