கோவை மாநகராட்சியைக் கண்டித்து வடவள்ளியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை : சீரான குடிநீர் விநியோகம் செய்யாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து வடவள்ளியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : சீரான குடிநீர் விநியோகம் செய்யாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து வடவள்ளியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சீரான குடிநீர் விநியோகம் செய்யாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும், இன்று காலை அப்பகுதியில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம். உட்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சீரான குடிநீர் விநியோகம் செய்யாத மாநகராட்சியைக் கண்டித்தும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 



இதனையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய முயன்றனர். ஆனால், அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்த போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து, காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது, வடவள்ளி பகுதியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் குற்றம்சாட்டினர். மேலும், தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தெரிவித்தனர்.



இதனிடையே, போராட்டம் நடைபெற்ற வடவள்ளி பேருந்து நிலையம் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். ஒருபுறம் தி.மு.க.வினர் மாநகராட்சி மற்றும் அ.தி.மு.க.வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி வந்த நிலையில், மறுபுறம் ஒலிபெருக்கியில் மழைக்காக யாகமந்திரங்கள் ஓதப்பட்டு வந்தது. இதனால், வடவள்ளி பேருந்து நிறுத்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. இருப்பினும், அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரைக் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...