கோவையில் பராமரிப்பின்றி உள்ள பழங்கால குகை ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டும் : சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோவை : தொல்லியல் துறைக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்து கோவையில் பராமரிப்பின்றி உள்ள பழங்கால குகை ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : தொல்லியல் துறைக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்து கோவையில் பராமரிப்பின்றி உள்ள பழங்கால குகை ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை ஆட்சியரிடம் இன்று தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குமிட்டிபதி, பொன்பரப்பி, வேட்டைக்காரன் மலை போன்ற பகுதிகளில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அவை தற்போது உரிய பராமரிப்பின்றி உள்ளது. மேலும், குகைகளை பார்வையிட செல்லும் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். சிலர் கரி உள்ளிட்டவற்றைக் கொண்டு ஓவியங்கள் மீது பெயர்களை வரைந்து ஓவியங்களை சேதப்படுத்துகின்றனர். 



இது தொடர்பாக தொல்லியல் துறைக்குப் புகார் அளித்தால், போதிய நிதி இல்லாததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே, உரிய நிதியை ஒதுக்கி விலைமதிப்பற்ற பழங்கால ஓவியங்களைக் காக்க கம்பி வேலிகள் அமைத்தும், சி.சி.டி.வி. மற்றும் பாதுகாவலர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...