ஜம்புகண்டி பகுதியில் மதுபானக் கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் : பணம் வாங்கி மனு கொடுத்த மலைவாழ் மக்கள்

கோவை : ஆனைகட்டி அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்தக் கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் என பணம் கொடுத்து அழைத்து வரபட்ட மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : ஆனைகட்டி அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்தக் கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் என பணம் கொடுத்து அழைத்து வரபட்ட மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கடந்த 24ம் தேதி ஆனைகட்டி சாலை ஜம்புகண்டி பிரிவில் ஏற்பட்ட சாலை விபத்தில் மருத்துவரும், சமூக ஆர்வலருமான ரமேஷ் என்பவரின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த விபத்தை தொடர்ந்து மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட வடக்கு வட்டாட்சியர் மதுபானக் கடையை தற்காலிகமாக மூடப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தால் நிரந்தரமாக மூடப்படும் என தெரிவித்தனர்.



இந்த நிலையில், மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என மருத்துவர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் மனு அளித்த நிலையில், ஆனைகட்டி ஜம்புகண்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை பணம் கொடுத்து அழைத்து வந்த ஒரு பிரிவினர் அங்கு மதுபான கடை வேண்டும் என மனு அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல தெரியாமல் விழித்தனர்.

பின்னர், அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர் கூறுகையில், "தடாகம் பகுதியில் இருந்து மது வாங்கி அதனை அதிக விலைக்கு விற்பவர்கள் தான் கடை வேண்டாம் என கூறுகின்றனர். மேலும், அங்கு கடை மூடப்பட்டால் சாராய புழக்கம் ஏற்படும். கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரிக்கும். இங்கு வேலை செய்பவர்கள் தினக்கூலிகள். எனவே, மது அருந்துவதால் அவர்களுக்கு உடல் அசதி குறையும்," என்றார். 



இதனிடையே, அங்கு வந்திருந்த பொதுமக்கள் கடை வேண்டும் வேண்டாம் என மாறி மாறி பேட்டி அளித்ததால், மலைவாழ் மக்களை அழைத்து வந்திருந்த ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களை கடிந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...