திருப்பூர் : திருப்பூர் அருகே குடிபோதையில் இருந்த வாலிபர், போக்குவரத்து போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் : திருப்பூர் அருகே குடிபோதையில் இருந்த வாலிபர், போக்குவரத்து போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் - அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அப்போது, முரளி குடிபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் பொண்ணண்னன் என்பவருக்கும், முரளிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், முரளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், காவலரின் சட்டையும் கிழிந்தது. இதனிடையே, காவலர் பொண்ணனன், குடிபோதையில் இருந்தவரை தரதரவென ரோட்டில் இழுத்து வந்த காட்சிகள், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியது.
தொடர்ந்து, காயமடைந்த காவலர் பொண்ணண்னன் மற்றும் முரளி ஆகிய 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.