கோவை : கோவையில் 6 நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி இன்று தொடங்கியது.
கோவை : கோவையில் 6 நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி இன்று தொடங்கியது.

தமிழ்நாடு கைவினை ஆணையம் சார்பில் சுகுணா கல்யாண மண்டபத்தில் ‘கிராஃப்ட் பசார் 2019’ என்ற தலைப்பில் கைத்தறி கண்காட்சி இன்று தொடங்கியது. வரும் ஜூலை 4-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியை ஆணையத்தின் தலைவர் ஜெய்ஶ்ரீ ரவி, செயலாளர் சுஜினி பாலு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கமாகும். கடந்த 15 ஆண்டுகளாக ஏதேனும் ஒன்றை மையப்படுத்தி இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆந்திராவை மையப்படுத்தி கண்காட்சி நடத்தப்படுகிறது. மங்கலகிரி, கலம்கரி, ஃபுல்கரி உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது,” என்கிறார் கைவினைப் பொருட்கள் ஆணையத்தின் தலைவர் ஜெய்ஶ்ரீ ரவி.

சுமார் 117 கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழ்நாடு கைவினை ஆணையம் சார்பில் சுகுணா கல்யாண மண்டபத்தில் ‘கிராஃப்ட் பசார் 2019’ என்ற தலைப்பில் கைத்தறி கண்காட்சி இன்று தொடங்கியது. வரும் ஜூலை 4-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியை ஆணையத்தின் தலைவர் ஜெய்ஶ்ரீ ரவி, செயலாளர் சுஜினி பாலு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கமாகும். கடந்த 15 ஆண்டுகளாக ஏதேனும் ஒன்றை மையப்படுத்தி இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆந்திராவை மையப்படுத்தி கண்காட்சி நடத்தப்படுகிறது. மங்கலகிரி, கலம்கரி, ஃபுல்கரி உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது,” என்கிறார் கைவினைப் பொருட்கள் ஆணையத்தின் தலைவர் ஜெய்ஶ்ரீ ரவி.

சுமார் 117 கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.