கோவை : அவிநாசி பைபாஸ் சாலையில் இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை : அவிநாசி பைபாஸ் சாலையில் இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதுச்சேரியில் உள்ள ரங்காரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகையன் மகன் ராகவன் (21), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (20) ஆகிய இருவரும் புதுச்சேரியில் உள்ள தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிஸ் இரண்டாமாண்டு இளங்கலை அறிவியல் படித்து வருகிறார்கள். அதே பகுதியைச் சேர்ந்த உடன் படிக்கும் 12 மாணவர்கள் ஆறு பைக்குகளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அவிநாசி பைபாஸ் சாலை திருப்பூர் பிரிவு பாலத்தில் வரும் போது, ராகவன் மற்றும் வேல்முருகன் இருவரும் வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதேபோல, அவிநாசி அருகே உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (27) என்பவர் திருப்பூர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவிநாசி பைபாஸ் சாலையில் தேவம்பாளையம் பிரிவில் முன்னே சென்ற பனியன் கம்பனி ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, விபத்துக்குள்ளாகி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவிநாசி பைபாஸ் சாலையில் இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.