திருப்பூர் : திருப்பூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்கும் பணிக்காக வந்த மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்கும் பணிக்காக வந்த மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரை அடுத்த பெரிச்சிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அருந்ததியர் குடியிருப்பு பகுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 3 தலைமுறைகளாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இக்குடியிருப்பு பகுதியின் அருகிலேயே இறந்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாடாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைக்கும் முயற்சியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மூன்று முறை மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து உரக்கிடங்கு அமைக்கக் கூடாது என பொதுமக்கள் சார்பில் மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அதிகாரிகள், இன்று சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, அதிகாரிகள் திருப்பி சென்றனர். இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அனைத்து கட்சியினர் சார்பில் நாளை மனு அளிக்க உள்ளனர்.
திருப்பூரை அடுத்த பெரிச்சிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அருந்ததியர் குடியிருப்பு பகுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 3 தலைமுறைகளாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இக்குடியிருப்பு பகுதியின் அருகிலேயே இறந்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாடாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைக்கும் முயற்சியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மூன்று முறை மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து உரக்கிடங்கு அமைக்கக் கூடாது என பொதுமக்கள் சார்பில் மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அதிகாரிகள், இன்று சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, அதிகாரிகள் திருப்பி சென்றனர். இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அனைத்து கட்சியினர் சார்பில் நாளை மனு அளிக்க உள்ளனர்.