தென்மேற்கு பருவமழையினால் மீண்டும் உயிர்பெற்ற கோவை குற்றாலம் : புதுப்பொலிவுடன் பயன்பாட்டிற்கு விரைவில் அறிமுகம்

கோவை : தென் மேற்கு பருவமழையினால் நீர்வரத்து பெற்ற கோவை குற்றாலம் அருவி, புதுப் பொலிவுடன் விரைவில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு விடப்பட இருக்கிறது.


கோவை : தென் மேற்கு பருவமழையினால் நீர்வரத்து பெற்ற கோவை குற்றாலம் அருவி, புதுப் பொலிவுடன் விரைவில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு விடப்பட இருக்கிறது.



கோவை சாடிவயல் பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றால அருவி. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியில், ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருக்கும். இந்த அருவியில் குளித்து மகிழ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த சூழலில், கடந்த இரு மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியதால் கோவை குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனை அடுத்து, காலவரையின்றி கோவை குற்றால அருவி மூடப்பட்டது. இதனால், நாள்தோறும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 



இந்த நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. கேரளா நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது கோவை குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு விரைவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில், பயணிகள் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ கான்கிரீட் தளங்களும், குழந்தைகளுக்கான நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. 



இதனையடுத்து, விரைவில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என போளுவாம்பட்டி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...