காலியாகும் அ.ம.மு.க.வின் கூடாரம் : செந்தில் பாலாஜியை தொடர்ந்து தி.மு.க.வில் ஐக்கியமாகும் தங்கதமிழ்செல்வன்?

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து அண்மையில் விலகிய அக்கட்சியின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நாளை தி.மு.க.வில் இணைய உள்ளார்.

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து அண்மையில் விலகிய அக்கட்சியின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நாளை தி.மு.க.வில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்தார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதற்கிடையே, தங்கதமிழ்செல்வனுக்கு டி.டி.வி.தினகரன் மீதும், அ.ம.மு.க. மீதும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் அவர் இணைய உள்ளதாகவும், இதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த அமைச்சர்களை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனாலும் அவர் இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வந்தார்.

மேலும், அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், “உங்கள் அண்ணனை (டி.டி.வி.தினகரன்) இந்த மாதிரி அரசியல் செய்வதை நிறுத்த சொல், நான் விசுவரூபம் எடுத்தால் அழிந்து போய்விடுவீர்கள்,” என தங்கதமிழ்செல்வன் ஆவேசமாக பேசுவதாக உள்ளது. இந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியான ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, டிடிவி தினகரன், “தங்க தமிழ்ச்செல்வனை விமர்சித்ததோடு அவரை கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கினார். இதைத்தொடர்ந்து, கொள்கை இல்லாத கட்சிக்கு உழைத்தது வீணாகிவிட்டதாகவும், அ.ம.மு.க. கட்சியில் ஒரு சதவீத தொண்டர்கள் கூட கட்சிக்கு இல்லை என்றும், பாதி நிர்வாகிகளும் கிளம்பிவிட்டதாகக் கூறினார்.

இந்த நிலையில், தான் எந்த கட்சியிலும் இணையவில்லை எனக் கூறியிருந்த தங்கதமிழ்செல்வன் நாளை தி.மு.க.வில் இணைய உள்ளார். ஏற்கனவே, தினகரன் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அ.ம.மு.க.வின் செய்தி தொடர்பாளரும், தொழில்நுட்பப் பிரிவு தலைவருமான சசிரேகா, மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...