பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு தொழில் துறையினர் வளர்ச்சி அடைவதற்கான நடவடிக்கைகள் : கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி

கோவை : பொதுமக்கள் மற்றும் சுற்று சூழல் பாதிக்காத வகையில் கோவையில் தொழில் துறையினர் வளர்ச்சி அடைய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார்.


கோவை : பொதுமக்கள் மற்றும் சுற்று சூழல் பாதிக்காத வகையில் கோவையில் தொழில் துறையினர் வளர்ச்சி அடைய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார்.



கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழில்கண்காட்சி வளாகத்தில் மாவட்ட தொழில்மையம் சார்பில் தொழில் துறையினர் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கலந்து கொண்டு தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ராஜாமணி செய்தியாளர்களை சந்தித்தார். 



அப்போது அவர் பேசியதாவது :- கோவை மாவட்டத்தில் தொழில் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தொழில் துறையினரின் பிரச்சனைகளும் தீர்வு காணப்படுகிறது. தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள தொழில் கூடங்களினால் ஏற்படும் பிரச்சனைகள், அவற்றிற்கு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில அரசின் திட்டங்கள் சலுகைகள், மத்திய அரசின் முத்ரா திட்டம் என அனைத்து திட்டங்கள் மூலமும் 100 சதவீதம் தொழில் துறையினர் பயன் அடைந்து வருகின்றனர். 



ஏதோ ஒரு சிலர் சரியாக திட்டங்கள் கிடைக்கப்பெறவில்லை என்று கூறுகின்றனர். அவர்களுக்கு மாவட்ட தொழில்துறை மையம் மூலம் தீர்வு காணப்படும். மேலும், தொழிற்சாலைகளின் வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகை அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பணிகளுக்காக சட்டப்படி செலவிடப்படும். எனவே, கோவையில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்று சூழல் பாதிக்காத வகையில் தொழில் துறையினர் மேலும் வளர்ச்சி அடைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், எனக் கூறினார்.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...