கோவை : சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி. நர்சிங் கல்லூரியின் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு இன்று நடக்கிறது.
கோவை : சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி. நர்சிங் கல்லூரியின் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு இன்று நடக்கிறது.
கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பி.எஸ்.ஜி. கல்லூரி நிர்வாகம் சார்பில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ். & ஆர் ஆடிட்டோரியத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கோவை குற்றப் புலனாய்வுத் துறையின் போதைப் பொருள் புலனாய்வு பணியகத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் ஆர். வின்சென்ட் கலந்து கொள்கிறார். அவர் மாணவர்களிடையே போதைப் பொருள் குறித்து விரிவாக விளக்கி பேச இருக்கிறார்.