கோவை : சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்
கோவை : சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புனித மார்க்ஸ் தேவாலயத்தில் மழை வேண்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார்.

இதையடுத்து, அதே பகுதியில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா அவுலியா தர்காவில், மழை வேண்டி நடந்த சிறப்பு தொழுகையிலும் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்ததாவது :- தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தந்து வருகிறார்கள். கடுமையான வறட்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மழை வர மரங்கள் முக்கியம். மாணவர்கள், பொதுமக்கள் மரங்கள் வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும். மேலும், உள்ளாட்சி துறை மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கும், என அவர் தெரிவித்தார்.