குன்னூர் ராணுவ முகாமில் பணியாற்றி ஓய்வுபெறும் ராணுவ வீரர்களுக்கு தீயணைக்கும் பயிற்சி

நீலகிரி : குன்னூர் ராணுவ மையத்தில் பணிபுரிந்து டிசம்பர் மாதத்தில் ஓய்வுபெற உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தீ விபத்து மற்றும் பேரிடர் கால மீட்பு பயிற்சி நடைபெற்றது.

நீலகிரி : குன்னூர் ராணுவ மையத்தில் பணிபுரிந்து டிசம்பர் மாதத்தில் ஓய்வுபெற உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தீ விபத்து மற்றும் பேரிடர் கால மீட்பு பயிற்சி நடைபெற்றது.



பொதுவாக, ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களது ஓய்வுக்குப் பிறகு பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தீயணைப்பு நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றால், அது அவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி மத்திய அரசின் சார்பில் தீயணைப்பு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், ஓய்வுபெற இருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அமிலம் மற்றும் பெட்ரோலிய பொருட்களால் ஏற்படும் தீயை அணைப்பது, பேரிடர் காலங்களில் தவித்துக் கொண்டு இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவது மற்றும் சாலைகளின் குறுக்கே மரம் விழுந்தால் அதனை எவ்வாறு அகற்றுவது, கான்கிரீட் வீடுகளின் இடர்பாடுகளுக்கு இடையே மாட்டிக் கொண்டு இருப்பவர்களை எவ்வாறு மீட்டு, அவர்களை வெளியே கொண்டு வருவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



இந்தப் பயிற்சியில் குன்னூர் தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன் தலைமையில் தீயணைப்பு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு, ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...