இரவில் மழை பெய்யும்: வானிலை மையம்

சென்னை: மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யும் என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இயல்பை விட மழை அளவு குறைவு:

தென்மேற்கு பருவமழை காலம் முடிய போகிறது. ஆனால் இந்த பருவத்தில், தமிழகத்திற்கு இயல்பை விட, மழை அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. தென் மாவட்டங்களில், நிலத்தடி நீரின் அளவும் சரிந்துள்ளது; அதனால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், சில இடங்களில் மழை பெய்தது. திண்டுக்கல்லில், அதிகபட்ச மழை பெய்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால், இரவு நேரங்களில் கடலோர வட மாவட்டங்களில் மழை பெய்யும்; இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...